சம்மாந்துறை தகிய்யா பள்ளிவாசலில் உணவு வங்கி அங்குராற்பண நிகழ்வு!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

அதிமேதகு ஜனாதிபதியின்  கருத்திட்டத்தின் கீழ்  ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கிணங்க  சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் சம்மாந்துறை தக்கியா பள்ளிவாசலில்  சம்மாந்துறை 1,2,4 ஆகிய பிரிவுகளுக்கான உணவு வங்கி அங்குராற்பண நிகழ்வு இன்று ( 2023.03.18) காலை சம்மாந்துறை தக்கியா பள்ளிவாசலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்  பிரதம அதீதியாக பிரதேச செயலாளர் தேசபந்து அல்ஹாஜ் S.L.M. ஹனீபா அவர்களும் தக்கியா பள்ளிவாசல் சார்பாக அதன் தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் A.M.M. சஹீட், உபதலைவர் பொறியியலாளர் நவாஸ், செயலாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கிதிர் முகம்மட் பொருளாலர் சட்டமுதுமாணி M.A.M. லாபீர் நிர்வாக உறுப்பினர்கள் அஸீஸ், சலிம் அவர்களும் தக்கியா பள்ளிவாசல் இமாம் M.A. அஜ்வத் ஹுசைன், அல்ஹாஜ் Z.A.பசீர்  மற்றும் அல்ஹாபீஸ் ஹனீபா  அவர்களும்  சம்மாந்துறை 1,2,4 ஆகிய பிரிவுகளுக்கான கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்களும், சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் உணவு வங்கிகளுக்கான  பொறுப்பு வாய்ந்த  உத்தியோகத்தர்களான றஹீம், அஸ்மி அவர்களும் பயனாளிகளும் கலந்துகொண்டார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives