சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் பாவனையாளர் அலுவல்களுக்கான பிரதேச மட்ட குழு அங்குராப்பனம்!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் பாவனையாளர் அலுவல்களுக்கான பிரதேச மட்ட குழு அங்குராப்பனம்!

 

வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சினால் பிரதேச மட்ட பாவனையாளர் அலுவல்களுக்கான பிரதேச மட்ட குழு அங்குராப்பன நிகழ்வானது சம்மாந்துறை பிரதேச செயலாளர் S. L. முஹம்மது ஹனீபா தலைமையில் இன்று(11) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்

இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் UM. அஸ்லம் , பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி A.L.M அஸ்லம் , சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் U.L.M. சலீம், கிராம சேவைக்கு பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர் ML.தாசிம், விவசாய போதனாசிரியர்கள், கமநல சேவை உத்தியோகத்தர்கள் , பாவனையாளர் அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள், வலய கிராம சேவை உத்தியோகத்தர்கள், வலய பொருளாதார அபிவிருத்தி உத்தியோகாத்தர்கள், பல்வேறு அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட குழு உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றதோடு இதில் குறிப்பாக சம்மாந்துறை பிரதேச செயலக மட்ட பாவனையாளர் குழு தெரிவானது சம்மாந்துறை பிரதேச செயலாளரை தலைவராக கொண்டு உருவாக்கப்பட்டதோடு உப தலைவராக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் அவர்களையும்

செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் தெரிவானது குழு உறுப்பினர்களின் எகமனதான தீர்மானத்தோடு பெண் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

 

இந் நிகழ்வினை ஏற்றுமதி அபிவிருத்தி உத்தியோகாத்தர்களான K. M. பாத்திமா ஸமீரா மற்றும் M.F.M.காமில் ஆசாத் ஆகியோர் இணைந்து எற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

(கி.ஷனுஸ்காந்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives