உயிர் காப்போம் !அதிகம் பகிர்வோம்!சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வோம்!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

உயிர் காப்போம் !
அதிகம் பகிர்வோம்!

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வோம்!

தற்போது சம்மாந்துறை இரத்த வங்கியில் , இரத்தப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

எதிர்வரும் காலம் ரமழானுடைய காலம் என்பதால் இரத்தம் கிடைக்கப்பெறுவதில் மேலும் குறைவு ஏற்படலாம் என்ற அச்சத்தால், றமழானுக்கு முன்னர் இயலுமானவர்கள் இரத்தம் வழங்கி வைக்க உதவ மக்களை கோருமாறு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியிடம் இருந்து நியூஸ்பிளஸ்-ற்கு அறிவிப்பு கிடைத்துள்ளது.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியில் எந்நேரமும் தங்களால் இரத்த தானம் வழங்க முடியும். ஓரிரு வாரங்களில் றமழானை அடையவுள்ளோம். அதற்கு முன்னர் றமழான் மாதத்தில் எதிர்நோக்கவுள்ள இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அனைவரும் முன்வருவோம் இன்ஷா அல்லாஹ்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives