வாகன இறக்குமதியை மீண்டும் அனுமதிக்குக; இறக்குமதியாளர் சங்கம் கோரிக்கை !
வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்குமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வாகன இறக்குமதி தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதற்கு திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை எனவும், பயன்படுத்திய வாகன விற்பனை சந்தைக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் கடன் வட்டி வீதத்தைக் குறைப்பதாக மத்திய வங்கி ஆளுநர் உறுதியளித்ததாகவும் சங்கம் கூறுகிறது.
பயன்படுத்திய வாகனங்களுக்கான வட்டி குறைக்கப்பட்டால், பயன்படுத் தப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான சந்தையை மேலும் பராமரிக்க முடியும் என்றும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Share this:
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More