பாடசாலை விடுமுறை குறித்து கல்வியமைச்சின் புதிய அறிவிப்பு
இந்தாண்டு இரண்டாம் தவணை மற்றும் மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாடசாலை தவணை இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மூன்றாம் தவணை எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும்.
அதன்படி, முதற்கட்டமாக பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 23ஆம் திததி முதல் ஜனவரி 1ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இரண்டாம் கட்டமாக ஜனவரி 2ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும்.
ஜனவரி 21 ஆம் திகதி மூன்றாம் தவணைக்காக மீண்டும் பாடசாலை மூடப்படும் என்றும், க.பொ.த சாதாரணதர பரீட்சை காரணமாக பெப்ரவரி 19 ஆம் திகதி வரை மூடப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மூன்றாம் கட்டத்தின் கீழ், பெப்ரவரி 20ஆம் திகதி பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this:
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More